கயசனூர்க் காட்டு நோய் (கே.எஃப்.டி) உண்ணியால் பரவும் நோய் ஆகும். இது ஒரு வைரல் குருதிப்போக்குக் காய்ச்சல். கருநாடக மாநிலத்தில் இது ஒரு கொள்ளை நோய் (தொடர்ந்து காணப்படுகிறது). பகுதி மக்களால் குரங்குக் காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. கே.எஃப்.டி வைரஸ் ஃபிளேவிவைரஸ் பேரினத்தையும் ஃபிளேவிவைரிடே குடும்பத்தையும் சார்ந்தது ஆகும்.
கருநாடக மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தின் கயசனூர்க் காட்டில் குரங்குகளுக்கு (கருப்புமுக நீண்டவால் குரங்கு மற்றும் செம்முக குல்லாய்க் குரங்கு) ஒருவித நோய் ஏற்பட்டுப் பின் அருகிலுள்ள பகுதிகளில் (சிமோகா மாவட்டத்தின் சாகர் வட்டம்) மனிதர்களுக்கும் காய்ச்சல் நோய் பரவி சில மரணங்களும் நிகழ்ந்தபோது கயசனூர்க் காட்டு நோய் வைரஸ் முதன்முதலில் 1957-ல் இனங்காணப்பட்டது.
முதலில் கருநாடக மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில் (சாகர், சிக்காரிப்பூர் மற்றும் சோரப்) மட்டுமே இந்நோய் இருந்தது. பின் வந்த ஆண்டுகளில், இந்நோய் கருநாடகத்தின் உத்தரக் கன்னடம், உடுப்பி, மங்களூர் (தச்சின கன்னடம்) மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களுக்குப் பரவியது.
2013-ல் கருநாடகத்தின் பந்திப்பூர் புலிகள் சரணால வனப்பகுதியில் கே. எஃப். டி. யின் ஒரு நோயெழுச்சி ஏற்பட்டது. 2014-ல் சிமோகா மாவட்டம் தீர்த்த அள்ளி வட்டத்தில் நோயெழுச்சி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கோவாவின் சத்தாரி வட்டத்தின் பாலி கிராமத்திலும், வட கிழக்கு கோவாவின் வால்போய் சமூக சுகாதார மையத்தின் கீழ் இருக்கும் மூன்று கிராமங்களிலும் (மௌக்சி, சார்மே மற்றும் கோபார்டெம்) 2015-ல் நோயெழுச்சி ஏற்பட்டது.
இந்தியாவின் பலபகுதிகளிலும் (குஜராத்தின் சௌராஷ்ட்டிரத்தின் பகுதிகள், மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் மேற்கு வனப்பகுதி, அந்தமான் தீவுகள்) ஊனீர் ஆய்வுகளில் கயசனூர்க் காட்டு நோய் வைரசுகள் கண்டறியப்பட்டன.
காடுகள் அழிக்கப்பட்டுப் புதிய நிலங்களில் வேளாண்மையும் கால்நடை மேய்ச்சலும் நடைபெறுவதால் உண்டாகும் சூழலுயிரியல் மாற்றங்களே கயசனூர்க் காட்டு நோய் வைரசுகள் புதிய இடங்களுக்குப் பரவுவதற்கும் புதிய நேர்வுகள் ஏற்படுவதற்கும் காரணம் என அறிய முடிகிறது,
கயசனூர்க் காட்டு நோய் வைரசோடு தொடர்புடைய வைரசுகள் சீனாவிலும் அரேபியாவிலும் இனங்காணப்பட்டுள்ளன.
குறிப்புகள்:
www.searo.who.int/publications
குறிப்புகள்:
ஃபிளேவிவைரஸ் தொகுதியைச் சார்ந்த கயசனூர்க் காட்டு நோய் வைரசால் இந்நோய் ஏற்படுகிறது. இது பிற உண்ணியால் பரவும் ஃபிளேவிவைரசுகளுடன் விளைவியத் தொடர்புடையது, இரசியன் இளவேனில்-வேனில் வைரஸ் தொகுதிகளை ஒத்துள்ளது.
க.கா.நோ. வைரஸ் பரவும் விதம்:
வைரஸ் தொற்றுள்ள முதிர்ச்சி அடையாத உண்ணி கடிக்கும் போது இது மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுவதாகத் தெரியவில்லை.
இயற்கை ஓம்புயிர்களும் புகலிடங்களும்: எலிகள், அணில்கள் போன்ற சிறு பாலூட்டிகளே இந்த வைரசின் புகலிடங்கள் ஆகும். குரங்குகளே இந்த வைரசுகளின் பெருக்கும் ஓம்புயிர்கள். வைரசுகளைப் பரப்பும் அதே நேரத்தில் அவை க.கா.நோ. வைரஸ் தொற்றால் மடிகின்றன. கால்நடைகள் இரத்த உணவளித்து உண்ணித் தொகையைப் பராமரிக்கின்றன. ஆனால் வைரஸ் பராமரிப்பில் அவற்றிற்குப் பங்கில்லை. மனிதர் முடிவான ஓம்புயிரி; வைரசைப் பரப்புவதில் பங்கேதும் இல்லை.
நோய்பரப்பிகள்: ஹீமாஃபைசாலிஸ் என்றப் பேரினத்தைச் சார்ந்த தோட்டுண்ணிகளே நோயைப் பரப்புகின்றன. ஹீமாஃபைசாலிசிசின் ஸ்பைனிகெரா சிற்றினமே முக்கிய நோய்பரப்பி. இது கருநாடக மாநிலத்தில் காணப்படுகிறது. காடுகளின் வழியாகச் செல்லும் மனிதர்கள் தொற்றுள்ள முதிர்ச்சி அடையாத உண்ணிகளால் கடிபடும்போது தொற்றைப் பெறுகின்றனர். முதிர்ச்சி அடைந்த உண்ணிகள் பெரிய கால்நடைகளின் இரத்தத்தைக் குடிக்கின்றன. இப் பெரிய கால்நடைகள் பெருகுவதற்கு ஏற்ற ஓம்புயிர்களே எனினும் இரத்தத்தில் குறைவான வைரஸ் எண்ணிக்கையைக் கொண்டிருப்பதால் பரப்புவதற்கு ஏற்றவை அல்ல. உண்ணிகள் ஒரு வளர்ச்சிக் கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு வைரசுகளைக் கடத்தி வைரசுகளுக்குப் புகலிடமாகத் திகழுகின்றன.
தோட்டுண்ணிகளின் வாழ்க்கை வட்டம்- தோட்டுண்ணிக்கு நான்கு வாழ்க்கைக் கட்டங்கள் உண்டு. முட்டை, முட்டைப்புழு, இளம்புழு, முதிர் உண்ணி. பெண் உண்ணி முட்டைகளை நிலத்தில் இடும். தாவரங்களின் அடியில் முட்டை புழுக்களாகப் பொரிக்கும். முட்டைப்புழுக்கள் சிறு பாலூட்டிகள் மற்றும் குரங்களின் இரத்தத்தைக் குடித்துப் பின் கீழ் விழுந்து இளம்புழுக்களாக மாறும். இளம் புழுக்கள் சிறு பாலூட்டிகள், பறவைகள் (எதிர்பாராத விதமாக மனிதர்கள்) ஆகியவற்றின் இரத்தத்தைக் குடித்து நிலத்தில் விழுந்து முதிர் உண்ணிகளாக மாறும். இவை பெரிய விலங்குகளான கால்நடைகள், குரங்குகள் போன்றவற்றின் இரத்தம் குடிக்கும். இவ்வாறு, முட்டைப்புழு, இளம்புழு மற்றும் முதிர் உண்ணிகள் என மூன்று நிலைகளில் வெவ்வேறு ஓம்புயிர்களில் உணவுண்ணுபவைகள் மூன்று ஓம்புயிர் உண்ணிகள் என அழைக்கப்படும்.
ஆபத்துக்காரணிகள்:
நச்சுக்காய்ச்சல், குடற்காய்ச்சல், டெங்கு, மலேரியா, மஞ்சள்காமாலை, கணைச்சூட்டுக் காய்ச்சல் வகைகள் போன்றவற்றில் இருந்து இந்நோயை வேறுபடுத்திப்பார்க்க வேண்டும். இரத்த மாதிரிகளில் பின்வரும் சோதனைகளைச் செய்ய வேண்டும்:
க.கா.நோ.வைரஸ் கண்டறிதல்-
குறிப்புகள்:
க.கா.நோய்க்கெனக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.
நீர்ச்சத்தைப் பராமரித்தல், இரத்தக் கசிவையும் நரம்பியல் சிக்கல்களையும் தடுத்துக் கட்டுப்படுத்துதல் ஆகிய ஆதரவு சிகிச்சையே இந்நோய் மேலாண்மையில் அடங்கும்.
குறிப்புகள்-
குருதிக்கசிவு: இடைவிட்டு மூக்கில் இரத்தம், இரத்த வாந்தி, கருமலம் மற்றும் மலத்தில் வெளிப்படையான இரத்தம் ஆகியவை இதில் அடங்கும்.
நரம்பியல் சிக்கல்கள்: மூளையுறை மற்றும் சூழ்திசு அழற்சியால் ஏற்படலாம். தலைவலி, கழுத்து விறைப்பு, மன உளைச்சல், கடும் நடுக்கம், தலைக்கிறக்கம் மற்றும் இயல்பற்ற அனிச்சைச் செயல்கள் அறிகுறிகளில் அடங்கும்.
குறிப்புகள்:
தடுப்பூசி, தனிநபர் காப்பு மற்றும் நோயெழுச்சி உள்ள இடங்களில் உண்ணிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை தடுப்பு முறையில் அடங்கும்.
குறிப்புகள்: